ஹட்டன், கினிகத்தேனை பகுதியில் கைதான முன்னாள் நாவலப்பிட்டி நகர சபைத் தலைவர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சுற்றி வளைப்பின்போது மேலும் சிலர் தப்பியோடியுள்ள நிலையில் சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபா பணம், மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந் நிலையில் குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் அவர்களை மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அவர்களை பி.சி.ஆர். சோதனைக்குட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM