(எம்.மனோசித்ரா)
புதிய தாராளவாத சமூக, பொருளாதார கொள்கைக்குள் செயற்படும் அதேநேரம் நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்த ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியான மங்கள சமரவீர தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது கவலையளிப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜக்ஷவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஏப்ரல் 28 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு தனது செயலாளரின் மூலம் நேற்று வியாழக்கிழமை பதில் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.
அத்தோடு மங்கள சமரவீரவின் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை ஆராய்கின்ற போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட வேண்டிய 7 விடயங்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'உருவாகியுள்ள பிரச்சினையை அரசியலமைப்புக்கு அமைவாக தீர்ப்பதற்கும் அரச செலவுகளை அனுமதிப்பதற்காகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கை' என்று தலைப்பிட்டு மங்கள சமரவீர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பல்வேறு பிழையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. எனவே முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் அத்தகையதொரு கடிதத்தை அனுப்பிவைப்பது கவலைக்குரிய ஒன்றாகும் என்று உங்களுக்கு தெரியப்படுத்தும் படி ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார் என்று ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த பதில் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை ஆராய்கின்ற போது பின்வரும் அவதானங்களுக்கு வரவேண்டியுள்ளது.
நீங்கள் அறிந்த வகையில் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு 21நாட்களுக்குள் வரவுசெலவுத்திட்டமொன்றை முன்வைப்பதற்கு முடியுமாக இருந்தது. 2015 ஆண்டுக்கான 2014 ஒக்டோபர் மாதம் நிதி ஓதுக்கீட்டு சட்டமும் குறித்த உத்தேச வரவுசெலவுத் திட்டமும் நிறைவேற்றப்பட்டிருந்த சூழலிலாகும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
2015 முதல் 2019 வரை நீங்களும் உங்களுக்கு முன்பிருந்த நிதியமைச்சரும் பல குறைநிறப்பு உத்தேச திட்டங்களை ஒவ்வொரு வருடமும் முன்வைத்ததுடன், வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்காக குறித்த சட்ட வரைவும் பாராளுமன்றத்தினால் சட்ட நிலைமைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.
2019ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமும் உத்தேச வரவுசெலவுத் திட்டமும் இருக்கின்ற போதும் செலுத்தப்படாத பட்டியல்களின் அளவு 182 பில்லியன் ரூபா என்பதுடன்இ அந்த நிலுவைப் பணம் உரம், மருந்துகள், முதியோர் நிவாரணங்கள், பல்வேறு நிர்மாணப் பணிகளுக்காக பொருட்கள், சேவைகள் வழங்குனர்களுக்கு வழங்கப்பட்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
211 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெற்று அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளின்றி அவை செலவிடப்பட்டிருந்த போதும் அரச கணக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்காதது.
தேசிய வருமான வளர்ச்சி நூற்றுக்கு 5வீதத்திலிருந்து நூற்றுக்கு 2.5 வீதம் வரை வருடாந்தம் பலவீனமடைந்தமை, அரச கடன், வரவுசெலவுத்திட்ட நிலுவை அதிகரிப்பு பற்றி முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் விளக்கங்கள் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தேசிய சொத்துக்களை விற்றபோதும்,அதன் மூலம் கிடைத்த வெளிநாட்டு பணத்தை கொண்டு வெளிநாட்டு கடனை அடைக்காமை குறித்தும், எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிதி ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காவிடின் அரசியலமைப்பின் 150(3) கீழ் ஜனாதிபதிக்கு இடைக்கால கணக்கின் மூலம் பாராளுமன்றம் கூட்டப்பட்டு 3 மாத காலப்பகுதிக்கான செலவுகளுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அது இதற்கு முன்னரும் நிதி ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நடைமுறைப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட சட்ட ஒழுங்காகும் என்பதை குறிப்பாக முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் அறிவீர்கள்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி புதிய அரசாங்கமொன்றை அமைத்ததன் பின்னர் அமைச்சரவையின் அனுமதியுடன் பிரதமரினால் நீங்கள் நிதி அமைச்சராக இருந்த காலம் உட்பட செலுத்தப்படவேண்டியிருந்த 182 பில்லியன் ரூபா நிலுவை பட்டியல்களும் 211 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் திட்டங்கள் நிதிக் கணக்கிடுவதற்கு சட்டமா அதிபரின் அனுமதியுடன் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களின் மக்கள் ஆணை கவனத்திற் கொள்ளப்படாமையும் கவலைக்குரியதாகும் என்று ஜனாதிபதி உங்களுக்கு அறியத்தருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அது 2015ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மை அரசாங்கத்திற்கு எதிர்கட்சி ஆதரவு வழங்கிய முறைமைக்கு முற்றிலும் புரம்பானதாகும்.
இவை அனைத்தையும் விட புதிய தாராளவாத சமூக, பொருளாதார கொள்கைக்குள் செயற்படும் உங்களைப் போன்ற படித்த அதேநேரம் நிதியமைச்சர் என்ற வகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்த ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி, தேர்தலை நடத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமையளிக்காதிருப்பது ஏன் என்பது குறித்து ஜனாதிபதி கவலையடைந்திருப்பதாக அவரின் பணிப்புரையின் பேரில் உங்களுக்கு அறிவிக்க விரும்புகின்றேன்.
இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஏனைய அனைத்து பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM