எகிப்தின், சினாய் பகுதியில் இராணுவ கவச வாகனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலானது வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலியானவர்களில் இரண்டு அதிகாரிகளும், எட்டு இராணுவ வீரர்களும் உள்ளடங்குவதாக தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், காயமடைந்தவர்களின் விபரங்களை குறிப்பிடவில்லை.
இஸ்லாமிய புனித ரமழான் மாதத்தில் நிகழ்ந்த இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
2013 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மொஹமட் மோர்சியை அதிகாரத்திலிருந்து இராணுவத்தினர் நீக்கியதையடுத்து சினாயில் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.
குறித்த வன்முறைச் சம்பங்களை கட்டுப்படுத்துவதற்கு பல ஆண்டுகலாக பாதுகாப்பு படையினர் போராடி வருகின்றனர்.
சீனாய் பிராந்தியத்தை மையமாக கொண்டு, 2018 பெப்ரவரியிலிருந்து எகிப்திய பாதுகாப்பு படையினர் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.
இராணுவ புள்ளி விபரங்களின்படி 60 க்கும் மேற்பட்ட படையினரும், 845 க்கும் மேற்பட்ட போராளிகளும் குறித்த பகுதியில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM