(செ.தேன்மொழி)
களுத்துறை பகுதியில் ஒரு கிலோகிராம் ஹெரொயின் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவல பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை அவதானித்துள்ள புலனாய்வு பிரிவினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 700 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதை அடுத்து காரில் பயணித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து மடவல பகுதியில் சந்தேக நபர்கள் வாடகைக்க பெற்று தங்கிவந்த வீட்டிலிருந்த 300 கிராம் ஹெரொயினும், 9மில்லி மீட்டர் ரக உள்நாட்டு ரிவோல்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை , பண்டாரகம மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதியைச் சேர்ந்த 21,27,29 ஆகிய வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM