குருநாகல், நாரம்மல பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில் மரண வீடு ஒன்றுக்கு வந்த சிலர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த சூதாட்டத்தில் மனித கொலைச் சம்பவம் ஒன்றுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கலந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது.
பொலிஸார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் தப்பியோட முயற்சித்ததுடன், கான்ஸ்டபிள் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கியை பறித்த போது அத் துப்பாக்கி எதிர்பாராத வகையில் வெடித்துள்ளது.
ஆனால் சந்தேக நபர் பலத்த காயங்களுக்குள்ளாகியதை யடுத்து அவர் உடனடியாக குருநாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM