இலங்கையில் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் முன்னணியிலுள்ள நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் இணை நிறுவனமும் இலங்கையின் முதல் தர தேயிலை வர்த்தக நிறுவனமுமான வட்டவல தேயிலை நிறுவனம் (WTCL), இலங்கையை மிக துரிதமாக வழமைக்கு கொண்டுவரும், COVID-19 நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலுள்ள நபர்கள் மற்றும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக அண்மையில் சிலோன் தேயிலையை நன்கொடையளிக்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பித்தது.
ஸெஸ்டா தேயிலை பொதிகள் மற்றும் வட்டவல பச்சை தேயிலை பொதிகள் உள்ளடங்கிய நிறுவனத்தின் அன்பளிப்புப் பொதியானது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக களனியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பிரதான விநியோக களஞ்சியத்தின் மேஜர் கே.ஜீ.எல்.ஆர்.என். கருணாதிலக்க மற்றும் பிரிகேடியர் ரி.எச். ட்ரஹீம் ஆகியோரிடம் வட்டவல தேயிலை நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் திரு. ஃபர்மான் நிஸாரினால் கையளிக்கப்பட்டது. வட்டவல தேயிலை நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியானது COVID-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களுக்குள் உட்படுத்தப்பட்டுள்ள மக்களுக்காகவும் அதில் சிரமத்துடன் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் முகமான ஒரு கூட்டு முயற்சியாகும்.
சிலோன் தேயிலையானது தாகம் மற்றும் சோர்வைத் தணிப்பதற்கு நாள் ஒன்றுக்கு பல தடவைகள் இலங்கையர்களால் விரும்பிப் பருகும் பானமாகும். சிலோன் தேயிலையானது சிறந்த மற்றும் மோசமான உடல் ஆரோக்கிய காலங்களிலும் மற்றும் சூடான அல்லது குளிரான காலநிலை நிலவும் சந்தர்ப்பத்திலும் அனைத்து இலங்கையர்களாலும் உடற் சுறுசுறுப்பிற்காக விரும்பி அருந்தும் பானம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தண்ணீருக்கு அடுத்ததாக உலகில் அதிகமானோரால் பயன்படுத்தும் பிரசித்தி பெற்ற பானமாக கருதப்படும் Camellia Sinensis (தேயிலை) கொளுந்துகளில் உற்சாகத்தை அதிகரிக்கும் ஒட்சீசனேற்றிகள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
'இலங்கையின் முதல் தர தேயிலை வர்த்தக நிறுவனம் என்ற கடப்பாட்டில் நாம் இந்த கடினமான காலப்பகுதியில் நாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். எமது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரு காரணிகளுக்கும் மிகவும் ஒத்தாசையாக நாம் நன்கொடையாக வழங்கிய தேயிலை, இந்த மத்திய நிலையத்திற்குள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டுள்ள எமது உறவுகளுக்கு அவசியமான புத்துணர்ச்சியையும் மற்றும் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுக்கும் அடிப்படையான விடயமாக இருக்குமென நாம் நம்புகின்றோம்.' என வட்டவல தேயிலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சுரித் பெரேரா தெரிவித்துள்ளார்.
சளிக் காய்ச்சல், சுவாச கோளாறு காரணமாக ஏற்படும் இன்புளுவென்ஸா மற்றும் பொதுவான தடிமலை கட்டுப்படுத்த தேவையான மூலக் கூறுகளை தேநீர் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கறுப்பு தேயிலையில் என்சைம ஒக்சிஜனேற்ற செயற்பாடுகளினால் உருவாகும் Theaflavinகளுக்கு மேலதிகமாக தேயிலையில் அடங்கியுள்ள ஏனைய இரசாயன பதார்த்தங்களும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். நோய் எதிர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவக் கூடிய சிறந்த பானமாக தேநீர் பிரபலமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலுள்ள நபர்களுக்கு தேநீரை வழங்குவதற்கு வட்டவல தேயிலை நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டமானது மத்திய நிலையங்களிலுள்ள நபர்களுக்கு COVID-19 வைரஸை எதிர்கொள்ளும் போது சாத்தியமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வலுவூட்டவும் அந்த வைரஸிற்கு எதிராக போராடுவதற்கும் உதவியளிக்கும். COVID-19 காரணமாக முன்னொருபோதும் இல்லாதவாறு தற்போது உருவெடுத்துள்ள மருத்துவ மற்றும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் பொறுப்புவாய்ந்த நிறுவனம் என்ற அடிப்படையில் வட்டவல தேயிலை நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் உதவி செய்வதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயலாற்றும்.
வட்டவல தேயிலை நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் திரு. ஃபர்மான் நிஸார் அவர்கள் பிரிகேடியர் ரீ.எச். ட்ரஹீமுக்கு தேயிலைப் பொதிகள் அடங்கிய பெட்டியை வழங்குகிறார். மேஜர் கே.ஜீ.எல்.ஆர்.என். கருணாதிலக்க மற்றும் வட்டவல தேயிலை நிறுவனத்தின் விநியோக வலையமைப்பின் சிரேஷ்ட முகாமையாளர் திரு. ஷானக்க ஜயவீர ஆகியோர் இருப்பதை படத்தில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM