பிரிட்டன் தேசிய சுகாதார சேவைக்கு பெரும் நிதி திரட்டிய பிரிட்டிஷ் போர் வீரரான டோம் மூர் இன்றைய தினம் தனது 100 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.
கொரோனா தொற்றுக்காரணமாக நாடு முழுவதும் பூட்டல் நடவடிக்கையானது அமுலில் உள்ளமையினால் அவர் தனது குடும்பத்தாருடன் ஆடம்பரமின்றி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
டோம் மூர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் வகையில் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்காக இதுவரையில் 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனது வீட்டில் இருக்கும் 25 மீட்டர் நீள தோட்டத்தில் 100 தடவை நடந்து, நன்கொடையாக திரட்டியுள்ளார்.
டோம் மூரின் 100 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காகக அவருக்கு 140,000 க்கும் மேற்பட்ட பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் இதுவரையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற கேப்டன் டோம் மூர், உலகப்போர் காலத்தில் இந்தியாவில் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Photo Credit : twitter
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM