கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) கிழக்கு லண்டனில் உள்ள ஐல்போர்டில், பதிவான ஒரு வயது மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட கொடூர சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வம்சாவளியை சேர்ந்த குறித்த குடும்பம் கிழக்கு லண்டனின் ஐல்போர்டில், வாழ்ந்துவந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு வயது மகள் மற்றும் மூன்று வயது மகன் கத்தியால் குத்திகொலைசெய்யப்பட்டதுடன் தந்தையும் கத்திகுத்து காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொலை, தற்கொலை முயற்சி என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அந்நாட்டு புலனாய்வு பிரிவினர் நேற்று புதன்கிழமை கொலை தொடர்பில் 40 வயதான குழந்தைகளின் தந்தையை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகளின் தாய் தமது குழந்தைகள் கொல்லப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த தருணத்தை வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தாம் குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்டு படுக்கையறைக்கு விரைந்த போது, சந்தேக நபரான குழந்தைகளின் தந்தை இரத்தில் நனைந்த ஒரு பெரிய சமையலறை கத்தியுடன் குழந்தைகளின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
அப்பாவி குழந்தைகளின் கொடூர கொலைக்கான காரணத்தை கண்டறிய புலனாய்வு பிரிவினர் தமது தீவிரவிசாரணையை தொடர்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM