இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள கசோட்டியா என்ற கிராமத்தில் திருமணமான ஒரு பெண்ணுக்கு இளைஞர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனையறிந்த அந்த பெண்ணின் கணவர் அவர்கள் இருவரையும் மரத்தில் நிர்வாணமாக கட்டி வைத்து அடித்துள்ளார்.
திருமணமான அந்த பெண்ணும் இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஓடிப்போய் சேர்ந்து வாழ முடிவெடுத்ததை தடுத்த அந்த பெண்ணின் கணவர் இருவரையும் ஊரில் உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தார்.
பெண்ணின் கணவருடன் கிராம மக்களும் சேர்ந்து இருவரையும் நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தியுள்ளனர். இரண்டு நாட்களாக அவர்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர் அந்த இளைஞரின் வீட்டில் உள்ளவர்கள் வந்து 80 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபா) கொடுத்து இளைஞரை மீட்டு சென்றுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த பொலிஸார் குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் காதல் ஜோடிகள் நிர்வாணமாக கட்டி வைத்து அடிக்கப்பட்ட புகைப்படத்தை சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த மனித தன்மையற்ற செயலில் ஈடுபட்டதாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவர் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM