நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான பாடசாலைகள் உட்பட பொது கட்டடிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்ற பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டிடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜயபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு உறுதியளித்துள்ளார்.
நாடாளாவிய ரீதியில் படைத் தரப்பினரினால் பொது கட்டிடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையினால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (29.04.2020) அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊடங்கு சட்டம் காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் துரதிஸ்ட வசமாக எதிர்காலத்தில் சமூகப் பரவலாக மாற்றமடையுமாயின், ஒவ்வொரு பிரதேசத்திலும் வைத்தியசாலைகளில் ஏற்படக் கூடிய இடப்பற்றாக் குறையை சமாளிப்பதற்கான முன்ஏற்பாடாகவும் குறித்த கட்டடிங்கள் அடையாளப்படுத்தப்பட்டு தயார்ப்படுத்தப்படுவதாகவும் எனினும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிறமாவட்டங்களில் இருந்து எந்தவொரு மாவட்டத்திற்கும் நோயாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுக் கட்டிடங்கள் பாதுகாப்பு தரப்பினரினால் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழர் பிரதேசங்களில் கொரோனா வைரஸை பரப்பும் நோக்கில் திட்டமிட்ட முறையில் அரசாங்கத்தினால் தனிமைப்படுதத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக குறுகிய நலன் கொண்ட தமிழ் அரசியல் தரப்புகளினால் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சில பிரதேசங்களில் மக்களை வீதிக்கு இறக்கி தேவையற்ற பதற்றத்தினையும் ஏற்படுத்தி வருகின்றமைக்கு தன்னுடைய கவலையையும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM