(எம்.எப்.எம்.பஸீர்)
தான் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் விதமாக இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷனி ஹேவாபத்திரன, அந்த திணைக்களத்தின் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் அகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி திலங்க பெரேரா ஊடாக அவர் இம்மனுவை இன்று இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்து சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து சி.ஐ.டி. விசாரித்து வருகின்றது.
தேர்தல் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இவ்விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அது குறித்து அவரைக் கைது செய்ய சி.ஐ.டி. தயாராகி வருவதாக சுட்டிக்கட்டியே, அதனை தடுக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM