5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்

Published By: Vishnu

29 Apr, 2020 | 06:22 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் 5000 ரூபாவை நிவரணமாக வழங்கி வருகின்றது. 

இதனை 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, வைரஸ் பரவலை  அரசாங்கம் தேர்தலில் வெற்றிக் கொள்வதற்கு பயன்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொவிட் - 19 வைரஸ் பரவல் தொடர்பில் அரசாங்கம் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கமைய செயற்படுவதாக தோன்றவில்லை.

தேசிய பாதுகாப்பு என்றுக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவில்லை. கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அனைவரும் விளக்கம் பெற்றிருந்த போதும் அரசாங்கம் விளக்கத்துடன் செயற்படுவதாக தோன்றவில்லை. 

பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச கொரோனா வைரஸ் தொடர்பில் உரை நிகழ்த்திய போது ஆளும் தரப்பினர் அதனை கேலிச் செய்தனர். சுகாதார அமைச்சர் எமது நாட்டுக்கு வைரஸினால் நெருக்கடி நிலைமையை ஏற்படவாய்ப்பில்லை என்றார். தற்போது என்ன நிகழ்ந்துள்ளது.

இராணுவத்தினருக்கு  வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு அவசியமான பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக் கொடுக்காததினால் இ இராணுவத்தினர் பலர் வைரஸ் தொற்றுக் குள்ளாகியுள்ளனர்.

இவர்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.அரசாங்கம் வைரஸ் தொற்றையும் தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு பயன்படுத்துவதாகவே எமக்கு தோன்று கின்றது. வைரஸ் பரவல் தொடர்பில் உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றிருந்த போதிலும்இ சர்வதேசத்திலிருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வழிகள் மூடப்படவில்லை.

இலங்கையில் சர்வதேச விமான நிலையம் ஒன்றே இருக்கின்றது. நாட்டில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும்  தேர்தலை அறிவிப்பதற்காக நாட்டை முடக்காமல் வைத்திருந்தனர்.இதனால் நாட்டு மக்களே பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

வைரஸ் தொற்று தொடர்பில் அனைத்து கட்சித்தலைவர்களுடனும் கலந்துரையாடி முறையாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47