கொரோனா வைரஸை விடவும் ராம் நரேஷ் சர்வான் கொடியன் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் குற்றம் சுமத்தியுள்ளார்.
கரிபீயன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்த கிறிஸ் கெய்ல், திடீரென அவ்வணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து டெரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியில் கெய்ல் இணைக்கப்பட்டார். இந்நிலையில் ஜமைக்கா அணியிலிருந்து தன்னை வெளியேற்றியமை அவ்வணியின் உதவி பயிற்றுநரான ராம் நரேஷ் சர்வான்தான் என கெய்ல் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து யூ டியூப்பில் வெளியான ‘வீடியோ’ பதிவில் கெய்ல் கூறியிருப்பதாவது:-
“சர்வான்...! இப்போதைக்கு கொரோனா வைரஸை விடவும் கொடியவனாக நீ இருக்கிறாய். ஜமைக்கா அணியிலிருந்து என்னை கழற்றி விட்டதில் உனது பங்கு மிகப்பெரியது என்பதை அறிவேன்.
அணி உரிமையாளருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, அணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் முயற்சிக்கிறார்.
அவருக்கும், ஏனைய வீரர்களுக்கும் அணியில் நிறைய பிரச்சினை இருக்கிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அவர் கூறி இருக்கிறார்.
அப்படியானால், இன்னும் ஏன் எனது தொலைப்பேசி அழைப்பை எடுக்கவில்லை. நீ ஒரு பாம்பு. பழிவாங்கி விட்டாய். கரிபீயன் மக்களால் அதிக நேசிக்கப்படும் நபர் நீ இல்லை.
உன்னிடம் முதிர்ச்சி இல்லை. நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டாய். இன்னமும் களத்தில் வலுவான வீரராக உள்ளேன். தொடர்ந்து வெற்றியாளராக வலம் வருவேன்” இவ்வாறு கிறிஸ் கெய்ல் அதில் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM