(செ.தேன்மொழி)
நாட்டின் மூன்று வேறுப்பட்ட பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான வடித்தலுக்கு பயன்படுத்தும் கோடாக்களுடன் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் சட்டவிரோத மதுபான வடித்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
களுத்துறை தெற்கு - ஹீனட்டியன்கல பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான கோடாக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போம்புவல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 61 ஆயிரத்து 500 மில்லி லீட்டர் மதுபானம் (82 போத்தல்கள்), ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 750 மில்லி லீட்டர் கோடாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை மினுவங்கொட- நில்பனாகொட பகுதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் இன்னுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.44 வயதுடைய குறித்த சந்தேக நபரிடமிருந்து 35 இலட்சம் மில்லி லீட்டர் கோடாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
பதுரலிய பகுதியில் 70 மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 48 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM