(செ.தேன்மொழி)
கிராண்ட்பாஸ், களுத்துறை தெற்கு மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கிராண்ட்பாஸ் - ஒருகொடவத்த மேம்பாலத்திற்கு அருகில் கொழும்பு குற்றப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 38 கிராம் 270 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை களுத்துறை தெற்கு பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் இன்னுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சேருப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 2 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM