தபால் சேவைகளை மே 4 இல் ஆரம்பிக்க நடவடிக்கை - தபால் மா அதிபர் 

Published By: Digital Desk 3

29 Apr, 2020 | 01:55 PM
image

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களும் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கு அமைய கைவிடப்பட்டிருந்த தபால் சேவைகள் மீண்டும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அதற்கமைய மே மாதத்திற்காக கொடுப்பனவுகள், முதியோருக்கான கொடுப்பனவுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்தையும் முன்னரைப் போன்று தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே திங்கட்கிழமை முதல் தபால் நிலையங்கள் ஊடாக நீர் இ மின்சாரம், தொலைபேசி கட்டணங்களைச் செலுத்துவதற்கும்இ கடிதம் மற்றும் பொருட்களை அனுப்பவும் பெற்றுக் கொள்ளவும் முடியும். 

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தபாலகங்களுக்கு வருகை தரும் பொது மக்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02