கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களும் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கு அமைய கைவிடப்பட்டிருந்த தபால் சேவைகள் மீண்டும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
அதற்கமைய மே மாதத்திற்காக கொடுப்பனவுகள், முதியோருக்கான கொடுப்பனவுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்தையும் முன்னரைப் போன்று தபால் நிலையங்களில் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே திங்கட்கிழமை முதல் தபால் நிலையங்கள் ஊடாக நீர் இ மின்சாரம், தொலைபேசி கட்டணங்களைச் செலுத்துவதற்கும்இ கடிதம் மற்றும் பொருட்களை அனுப்பவும் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தபாலகங்களுக்கு வருகை தரும் பொது மக்கள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM