(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக ஒரு மாதமும் ஒரு வாரமும் கடந்துள்ள நிலையில், அதற்கு புறம்பாக செயற்பட்டதாக 40 ஆயிரத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 560 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
வைரஸ் தொற்றினால் ஏற்படும் நெருக்கடிநிலைமையை கருத்திற்கொண்டு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதற்போது இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனையப்பகுதிகளில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்ததுடன், எதிர்வரும் முதலாம் திகதி வரை ஊரடங்கு காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை தளர்த்தப்படுவதுடன் இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் அமுல் படுத்தப்படும்.
இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை காலை ஆறு மணி வரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 1128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 303 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதற்கமைய கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
மக்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்றவகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அதற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 41 ஆயிரத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 560 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM