ஊரடங்கை மீறிய 40 ஆயிரத்து  மூன்று பேர் கைது :10,560 வாகனங்கள் பறிமுதல்!

Published By: Vishnu

28 Apr, 2020 | 07:28 PM
image

(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக  ஒரு மாதமும் ஒரு வாரமும் கடந்துள்ள நிலையில், அதற்கு புறம்பாக செயற்பட்டதாக 40 ஆயிரத்து மூன்று  பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 10 ஆயிரத்து  560  வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வைரஸ் தொற்றினால் ஏற்படும் நெருக்கடிநிலைமையை கருத்திற்கொண்டு கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாடுபூராகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதற்போது இடர்வலையங்களைத் தவிர ஏனையப்பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்களைத் தவிர ஏனையப்பகுதிகளில்  இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்ததுடன், எதிர்வரும் முதலாம் திகதி வரை ஊரடங்கு காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை தளர்த்தப்படுவதுடன் இரவு 8 மணிக்கு பிறகு  மீண்டும் அமுல் படுத்தப்படும்.

இந்நிலையில்  இன்று செவ்வாய்கிழமை காலை ஆறு மணி வரையிலான  24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 1128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து 303  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதற்கமைய கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

மக்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்றவகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில்  அதற்கு புறம்பாக செயற்பட்டதாக  இதுவரையில் 41 ஆயிரத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 560  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58