கெரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவையொட்டி நடைபெறவிருந்த மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான சகல போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வீர, வீராங்கனைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடக் கூடாது என்பதற்காக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விளையாட்டு விழாவின் இவ்வருடத்துக்கான மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளை கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து கட்டங்களின் கீழ் நடைபெறவுள்ள இவ்வருடத்துக்கான 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றிருந்தது.
இதனிடையே, தற்போது நாட்டில் நிலவுகின்ற சுகாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு தேசிய ரீதியிலான போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மாவட்ட மற்றும் மாகாணங்களைச் சேர்ந்த விளையாட்டுத்துறை பணிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததுடன், தேசிய விளையாட்டு விழாவின் முதலாம் கட்டத்தின் கீழ் நடைபெறவிருந்த போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாட்டின் ஒருசில மாவட்டங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா அச்றுத்தால் காரணமாக நடத்த முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா பெரும்பாலும் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM