(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியது என்றும் அவர் சாடியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது,
கொவிட் - 19 கொரோனா வைரஸ் நபர்களுக்கு இடையிலான தொடர்புகள் மூலம் மிகவேகமாகப் பரவுகின்றது. ஆகவே தொற்றாளர்களை அடையாளம் காணுவதற்காக பரிசோதனைகள் மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த வேளையில், கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் தத்தமது அரசியல் தேவைப்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே வெகுவாகக் கவனம் செலுத்தியிருந்தனர்.
உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காணும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அளவு எமது நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதொன்றே மிக முக்கிய தேவையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM