கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
இது 73.84 வீதமாகும் என பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரநவதாசன் தெரிவித்தார்.
கடந்த முறை சாதாரணதர பரீட்சைக்கு 7 இலட்சத்து 17 ஆயிரத்து 246 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து 256 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
பரீட்சாத்திகளில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 189 பேர் பாடசாலை மூலமும், 2 இலட்சத்து 84 ஆயிரத்து 57 பேர் தனியார் பரீட்சாத்திகளாகவும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 989 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றதோடு, 542 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
அதில், பெறுபேறுகளின் அடிப்படையில் 10 ஆயிரத்து 346 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். இது 73.84 வீதமாகும்.
கணித பாடத்தில் 66.82 வீதத்தினர் சித்தியடைந்துள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளங்களான www.doenets.lk kw;Wk; www.results.exams.gov.lk என்பவற்றில் சென்று பார்வையிட முடியும்.
இத்துடன் கொழும்பு பிராந்திய பாடசாலை அதிபர்கள் எவரும் நேரில் திணைக்களத்துக்கு வந்து மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.
பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படுமானால் பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் அமைப்பின் 011-2784208 > 011-2784537 > 011-3188350 0113140314 என்ற இலக்கங்களுக்கும் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கும் அழைப்பினை மேற்கொண்டு தெரிந்து கொள்ள முடியும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM