(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனை முற்றாக ஒழிப்பதற்காகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களுக்காக சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்காக சீன அரசாங்கத்தால் 211 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சுகாதார அங்கிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹூ வே சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் இவற்றை இன்று திங்கட்கிழமை கையளித்தார்.
சீன அரசாங்கத்தால் கொரோனா வைரசுக்கு எதிராக சுகாதாரத்துறையை பலப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களோடு 20 ஆயிரத்து 16 Novel Coronavirus (2019-ncoV) Nucleic Diagnisic Kit (PCR-Fluorescence PProbing) மருத்துவ முகக் கவசங்கள் 10 000 , சத்திர சிகிச்சை முகக் கவசங்கள் ஒரு இலட்சம் , ஒரு தடவை பயன்படுத்திய பின்னர் அகற்றக் கூடிய அங்கிகள் ஒரு இலட்சம் , Medical Goggle 1000 , ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக் கூடிய 5000 கையுறைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் போது இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் கொரோனா ஒழிப்பிற்காக சீனா முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் பவித்திரா வன்னயாராச்சிக்கு தெளிவுபடுத்தினார்.
இது போன்று இலங்கை நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன உதவிகள் செய்துள்ளமைக்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நன்றி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM