ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் பின்வாங்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது மோதல் சம்பவம் இதுவென கூறப்படுகிறது. இதேவேளை, நேற்று இடம்பெற்ற முதலாவது மோதலில் 4 பேர் உயிரிழந்துள்னர். இந்நிலையில் மொத்தமாக இந்த மோதலில் ஏழு பயங்கவரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குல்கம் மாவட்டத்தில் லோயர் முண்டா என்ற பகுதியிலேயே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரு தரப்பினருக்கிடையிலான இந்த பரஸ்பர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் சார்பில் எவரும் காயமடையவில்லை என்றும் குறித்த பகுதியின் மூத்த பொலிஸ் உயர் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2020 ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடந்த 40 க்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்களில் குறைந்தது 76 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM