(இராஐதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதி முன்னெடுத்த செயற்பாடுகளை எவரும் கேள்விக்குற்படுத்த முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை(27.04.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸை கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவரும் கேள்விக்குற்படுத்த முடியாது.
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஊடாக இதுவரையில் சமுர்த்தி பயனாளர்கள் உட்பட சுமார் 74 இலட்சம் பேருக்கு 5000ம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டிதான் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.
பொதுத்தேர்தல் இடம்பெற்று புதிய அரசாங்கம் தோற்றம் பெரும்வரை கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூடாது. முப்படையினர், சுகாதார துறையினரது ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸை முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM