(தி.சோபிதன்)
யாழ். நகரப்பகுதிகளில் 10 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை களவெடுத்த திருடர்களையும் திருடிய பொருட்களை வாங்கிய நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டிடம் நிர்மாணிக்கும் இடத்தில் இருந்து, கட்டிட பொருட்கள் மற்றும், ரில்டர் உள்ளிட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளனர்.
நகரப் பகுதிகளில் உள்ள கடைகளிலும் திருடி விற்பனை செய்துள்ளார்கள்.
இவ்வாறு 3 இடங்களில் திருடிய இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் இலத்திரனியல் பொருட்கள், என்பன திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் நாவாந்துறை மற்றும் பொம்மைவெளி, கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த சுமார் 8 பேர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.எம்.ஆர்.சி. முனசிங்க மற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்களான ஹர்சன், ஹபுலியட்ட, கவியரசன், ரஞ்சித், கிங்ஸ்லி, மற்றும் மரியசிறி, உபாலி, ரட்ணாயக்க,சுரேகா உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும், யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM