(செ.தேன்மொழி)
அப்புத்தளை உள்ளுராட்சி சபை பெண் உறுப்பினர் ஒருவரின் கணவர் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் குறித்த மதுபானத்தை விற்பனை செய்யும் நோக்கிலே , அவர்கள் இதனை வீட்டில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கலாம் என்று பொலிஸார்' சந்தேகிக்கின்றனர்.
சம்வம் தொடர்பில் ஊள்ளுராட்சி மன்ற உறுப்பினரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 26 சாராய போத்தல்களும் , 15 வைன் போத்தல்கள் உட்பட பியர் போன்ற மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM