வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் நேற்று (25) மேற்கோள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60 ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கொரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த முகாமில் பணியாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் அண்மையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த உத்தியோகத்தர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரத்தமாதிரிகள் நேற்று பெறப்பட்டடிருந்தது.
குறித்த இரத்தமாதிரிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவருக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட நிலையில் அவருக்கு அதற்கான அறிகுறிகள் இல்லை என முடிவுகள் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM