(செ.தேன்மொழி)
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சதுப்பு நிலமொன்றில் நேற்று சனிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஹாகொட - நுகேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து 33 ஆயிரத்து 750 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம் (45போத்தல்கள்), மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 3 இலட்சத்தி 55 ஆயிரம் மில்லி லீட்டர் கோடாக்கலும் (2 பீப்பாய்கள் )கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை,பாதுக்க பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஆற்றுக்கு அருகில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 5 இலட்சத்து 5 ஆயிரம் மில்லிலீட்டர் (3 பீப்பாய்கள் ) கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM