இந்திய அணியில் தன்னம்பிக்கை இல்லை - ஹர்பஜன் சிங்

Published By: J.G.Stephan

25 Apr, 2020 | 08:59 PM
image

இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரை மட்டுமே சார்ந்திருப்பதால் தற்போதைய இந்திய அணியிடம் குறைந்தளவு தன்னம்பிக்கையே காணப்படுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி இருவரும் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களாக வலம் வருகின்றனர்.  95 சதவீதம் போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டால், போட்டியை வெற்றிகரமாக கொண்டும் செல்லும் தன்னம்பிக்கை ஏனைய வீரர்களிடம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘‘தற்போதுள்ள இந்திய அணியில் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு பேரை சார்ந்தே உள்ளது. சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அதிகப்படியான நம்பிக்கையில் இல்லை. ரோஹித்தும் கோஹ்லியும் ஆட்டமிழந்து விட்டால் 70 சதவீத போட்டி,  நம்மிடமிருந்து கை நழுவி விடுகிறது. இதற்கு தன்னம்பிக்கை இல்லாததுதான் காரணம்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35