கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான அட்டவணை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒலிம்பிக் குழு ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவுசெய்யப்பட்டு உரிய தினத்தில் போட்டிகளை நடத்த ஜப்பான் தயாராக இருந்தது.
ஜப்பானிலும் கொரோனா தொற்று காணப்படுவதால், ஒலிம்பிக் விழாவை எதிர்வரும் 2021 ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்தது. இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவுக்கான அட்டவணைகள் தயாரிக்கும் பணி கடந்த மாதம் ஆரம்பமானது.
ஜப்பானில் ஊரடங்கு நிலவுவதால் டோக்கியோ ஒலிம்பிக் குழு ஊழியர்கள் 3,800 பேர் வீட்டிலிருந்தடி வேலை செய்து வருகின்றனர். அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை ஒலிம்பிக் குழுவின் தலைமை அலுவலகத்தில் இருந்து சிலர் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஊழியர்களில் 30 வயதுடைய ஆணொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பில் அந்நாட்டு ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன், குறித்த நபர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் விழாவை நடத்துவதில் முன்பு தீவிரமாக இருந்த ஜப்பான் ஒலிம்பிக் குழு நிர்வாகிகளுக்கு இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM