சுமந்திரன் சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார் - செஹான் சேமசிங்க

25 Apr, 2020 | 02:42 PM
image

(இராஐதுரை ஹஷான்)

ஊரடங்கு சட்டம் சட்டத்தின் பிரகாரம் அமுல்படுத்தப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளமை சமூகத்தின் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாக்க் கொண்டு கருத்துரைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில்  இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும்இ பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் உலகளாவிய மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில் 74 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன. நிவாரணம் கிடைக்கப்பெறாதவர்கள் கிராம சேவகர் ஊடாக  இந்நிதியை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் பொது சட்டத்தின் பிரகாரம் அமுல்படுத்தப்படவில்லை. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு  குறிப்பிட்டுள்ளதாவது ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

அரசியலமைப்புக்கு முரணாக ஜனாதிபதி செயற்படுகின்றார். என எதிர்தரப்பினர் குறிப்பிடுவது தவறான கருத்தாகும்.பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி குறிப்பிட்டமை அனைத்தும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே காணப்பட்டது.

பொதுத்தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியோ, அரசாங்கமோ தேர்தல் ஆணைக்குழுவுக்கு எவ்வித  அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை. தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டே  தீர்மானங்களை எடுக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53