கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க, சர்வதேச சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் ஐக்கிய இராஜ்ஜியம் ஒரு உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.
இந்த சர்வதேச மாநாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்த டொமினிக் ரோப்,
நோய்களுக்கு எல்லைகள் இல்லை. எனவே கொரோனவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க 'Gavi' (தடுப்பூசி கூட்டணி) க்கு முழுமையாக நிதியளிக்கப்படுகிறாதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
Gavi என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும், இது தடுப்பூசிகளுக்கான அணுகலை மேம்படுத்த பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சவுதி அரேபியா, நோர்வே மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட சர்வதேச பங்காளிகளுடன் மே 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் 'Global Response' உச்சி மாநாட்டை பிரிட்டன் இணைந்து நடத்தவுள்ளதாகவும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் கூறினார்.
கோவிட் தடுப்பூசி மற்றும் சிறந்த பரிசோதனையை உருவாக்கும் முயற்சிகளில் இங்கிலாந்து முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா வைரஸ் 'Global Response' உச்சி மாநாட்டை மே 4 அன்று எங்கள் பங்காளிடகளுடன் இணைந்து நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.
Photo Credit : Reuters
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM