கொரோனா வைரஸ் குறித்து சுயாதீன விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்ற வேண்டுகோள்களை சீனா நிராகரித்துள்ளது.
பிரிட்டனிற்கான சீனாவின் முக்கிய இராஜதந்திரியான சென்வென் சீனா இந்த வேண்டுகோளை நிராகரிக்கின்றது என பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
சுயாதீன விசாரணைக்கான வேண்டுகோள்கள் அரசியல் நோக்கங்களை கொண்டவை,கொரோனா வைரசிற்கு எதிராக சீனா மேற்கொண்டுள்ள போராட்டத்திலிருந்து கவனத்தை திசை திருப்பிவிடக்கூடியவை என சென்வென் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகளை சீனாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தற்போது வைரசிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றோம்,நாங்கள் எங்கள் முழுக்கவனத்தையும் வைரசிற்கு எதிராக திருப்பியுள்ளோம் என சீன இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஏன் விசாரணைகள் குறித்து பேசவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள அவர் இது எஙகள் கவனத்தை மாத்திரமல்ல வளங்களையும் திசைதிருப்பிவிடும் என தெரிவித்துள்ளார்.
இது அரசியல் உள்நோக்கங்களை அடிப்படையாக கொண்டது,எவரும் இதற்கு இணங்க முடியாது,எவருக்கும் இதனால் நன்மை ஏற்படப்போவதில்லை என சீன இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM