மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச 5 ஆயிரம் கொடுப்பனவு திட்டத்தில் ஒரு இலச்சத்தி 82 ஆயிரத்து 826 குடும்பங்களுக்கு 91 கோடியே 41 இலச்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த பணம் வழங்கும் உதவி திட்டம் இவ்வாரம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (24.04.2020) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார் .
இம்மாவட்டத்தில் வயோதிபர் கொடுப்பனவாக 15 ஆயிரத்து 51 குடும்பங்களுக்கு 7 கோடியே 52 இலச்சத்து 55 ஆயிரம் ரூபாவும், வலது குறைந்தவர்களுக்குரிய கொடுப்பனவாக 6 ஆயிரத்து 651 குடும்பங்களுக்கு 3 கோடியே 32 இலச்சத்து 55 ஆயிரம் ரூபாவும், சமுர்த்திப் பயனாளிகள் காத்திருப்புப் பட்டியலிலுள்ளவர்கள் 1 இலச்சத்து 36 ஆயிரத்து 177 குடும்பங்களுக்கு, 68 கோடியே 8 இலச்சத்து 55 ஆயிரம் ரூபாவும் இதுவரையில் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர இம்மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 23 ஆயிரத்து 422 குடும்பங்களுக்கு 11 கோடியே 71 இலச்சத்து 10 ஆயிரம் ரூபாவும், சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக 248 குடும்பங்களுக்கு 12 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவும், நிவாரணம் கிடைக்கவில்லையென மேன்முறையீடு செய்த ஆயிரத்து 277 குடும்பங்களுக்கு 63 இலச்சத்து 85 ஆயிரம் ரூபாவும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இம்மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளால் வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொதிகள் 69 ஆயிரத்தி 449 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் சுகாதாரதுறையினர், அரச திணைக்களங்க உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM