உலகளவில் ஏப்ரல் 24ஆம் திகதியன்று மூளைக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 'மூளைக்காய்ச்சலை தோற்கடிப்போம்' என்ற விழிப்புணர்வு வாசகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காய்ச்சல், வாந்தி, தலைவலி, மூட்டு வலி, வெளிறிய தோல், உள்ளங்கையில் மாறுபட்ட தட்பவெப்பம், கழுத்து பாதிப்பு உள்ளிட்ட அறிகுறிகளுடன் மூளைக்காய்ச்சல் என்ற பாதிப்பு ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரிடம் சென்று இதற்குரிய சிகிச்சை பெறவேண்டும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இத்தகைய பாதிப்பால் மூளை மற்றும் தண்டுவடப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, பாதிப்பு உண்டாகும். உரிய தருணத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். சிலருக்கு நாட்பட்ட பாதிப்புகள் நீடிக்கக் கூடும்.
உலக அளவில் மூளைக் காய்ச்சலால் ஐந்து மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004 ஆம் ஆண்டிலிருந்து மூளைக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அறிவிக்கப்பட்டு, உலகம் முழுவதும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ' defeat meningitis' என்ற வாசகத்துடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
டொக்டர் கோடீஸ்வரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM