(இரா.செல்வராஜா)
நாட்டின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை (25.04.2020) 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இடைப்பருவப் பெயர்ச்சி காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சப்ரகமுவ ,மேல், மத்திய ,வடமேல் , தென் ஆகிய மாகாணங்களிலும் , மன்னார், வவுனியா ,காலி , மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் நாளை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்நிலையில் சப்பிரகமுவ , மத்திய , தென் , ஊவா ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
புத்தளம், கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை , பொத்துவில் ஊடாக மட்டகளப்பு வரையிலான கடற்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும். அவ்வேளை காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்ற்ர் அதிக வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM