இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் அமைந்துள்ள ஹார்ட்லேண்ட்ஸ் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய் ஒருவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின் மரணமடைந்துள்ளார்.
29 வயதான குறித்த தாய் கர்ப்பிணியாக இருக்கும் போதே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி சத்திரசிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
ஆனால், குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை, இதனையடுத்து குறித்த தாய் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளார்.
எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இரத்த உறைவு உருவாக்கி கோமா நிலைக்குச் சென்றுள்ளார். இதனைடுத்து அவரது கணவரும் தந்தையும் தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளை அணிந்து அவரை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பர்மிங்காம் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாயின் உடல்நிலை காரணமாக, தனது குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை, இறப்பதற்கு முன் தனது குழந்தையின் புகைப்படங்களை மட்டுமே அவர் பார்த்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM