(எம்.எப்.எம்.பஸீர்)
தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்புடன், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆரச்சி தலைமையில் இடம்பெற்ற தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றின் பணிப்பாளர்களுடனான விஷேட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பணிமனை தெரிவித்தது.
இந் நிலையில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதுவரை இலங்கையில், கொரோனா தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் 13 அரச பரிசோதனை மையங்கள் ஊடாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.
சுமார் 600 வரையிலான மாதிரிகளே நாளொன்றுக்கு பரிசோதிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழல், அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் போது சுகாதார துறைக்கு ஏற்பட்டுள்ளது. இந் நிலையிலேயே தனியார் வைத்தியசாலைகளுடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சு கலந்துரையாடியுள்ளது.
இந் நிலையில் டேர்டன்ஸ் வைத்தியசாலை, நவலோக்க வைத்தியசாலை, ஆசிரி வைத்தியசாலை மற்றும் லங்கா வைத்தியசாலை ஆகிய தனியார் வைத்தியசாலைகளில் இந்த பி.சி.ஆர். குறித்த பரிசோதனைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதன்படி சேகரிக்கபப்டும் மாதிரிகளில், இந்த தனியார் வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் நாளொன்ருக்கு தலா 100 பரிசோதனைகள் வரை முன்னெடுக்க முடியுமாக இருக்கும் என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்ரனர்.
அதன்படி நாளொன்ருக்கு இலங்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை முன்னெடுக்க கூடியதாக அமையும் என அந்த தகவல்கள் சுட்டிக்கடடுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM