(எம்.எப்.எம்.பஸீர்)
வெலிசறை கடற்படை முகாமில் 28 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதியாகியுள்ள நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.
பொலன்னறுவை - புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றாளராக பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று காலை, வெலிசறை முகாமில் குறித்த வீரர் தங்கியிருந்த முகாமில் இருந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் போது அங்கு தங்கியிருந்த 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் அடையாளம் காணப்பட்ட கடற்படை வீரர், குருணாகல் வாரிய பொல பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் உட்பட வெலிசறை முகாமின் 30 கடற்படை வீரர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்நிலையில், குறித்த வெலிசறை கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அண்மையில் விடுமுறைக்கு அங்கிருந்து சென்ற அனைத்து கடற்படை வீரர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில், இன்று மாத்திரம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் 254 பேர் வைத்திசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவருகின்றதுடன் 107 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM