(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஜேர்மன் மற்றும் நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி அந்நாட்டுத் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பிவைத்திருக்கிறார்.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் உலகநாடுகள் பலவற்றுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நிலையில், செயற்திறன் மிக்க நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கும் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் மற்றும் நோர்வே பிரதமர் ஏர்னா சுர்பேர்க் ஆகியோரைப் பாராட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பிவைத்திருக்கிறார்.
அந்தவகையில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கலுக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கொரோனா வைரஸ் பரவலானது மக்களின் அன்றாட வாழ்க்கை முறைக்குப் பாரிய அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் தோற்றுவித்திருப்பதுடன், எதிர்காலம் தொடர்பான அவதானநிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் உங்களது தலைமைத்துவத்தின் கீழ் கொரோனா வைரஸ் பரவலால் ஜேர்மனிய மக்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து விரைவாக மீளமுடியும் என்று நம்புகின்றேன். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்துவதற்கும் உங்களது அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் எனைய நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று நோர்வே பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நோர்வே தொற்றுநோய் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருக்கிறது என்றும் சுட்டக்காட்டியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM