சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள வீர,வீராங்கனைகளுக்கு உதவுவதற்கு டென்னிஸ் உலகம் முன்வர வேண்டும் என டென்னிஸ் நட்சத்திரமான நொவாக் ஜோகோவிக் வலியுறுத்தியுள்ளார்.
கொரோன வைரஸ் தொற்று ஒரே நேரத்தில் உலகம் முழுவதையும் முடக்கி போட்டுள்ளது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் உள்ளது. ஆகவே, வீர, வீராங்கனைகள் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சம்பந்தப்பட்டவர்கள் என பலரும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.
டென்னிஸ் போட்டியை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு தொடரிலும் வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அதேவேளையில் மிகவும் பின்தங்கிய தரவரிசையில் இருக்கும் வீர, வீராங்கனைகளுக்கு பெரியளவில் வருமானம் கிடைக்காது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்களுக்கான விளையாட்டுக்களை ஏ.டி.பி. டுவரும், பெண்களுக்கான போட்டிகளை டபிள்யூ.டி.ஏ.யும் நடத்துகின்றன. அத்துடன், நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளும் அந்தந்த அமைப்பாளர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் வீர, வீராங்கனைகளுக்கு நிதி வழங்கி உதவ முன்வர வேண்டும் என சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில் ‘‘நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு உதவி செய்யக்கூடியதும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு முன்னணி வீரர் என்ற அந்தஸ்தை நான் பெற்றுள்ளேன். தனிப்பட்ட முறையில் டென்னிஸ் நடைபெறாவிட்டாலும் பல ஆண்டுகளுக்கு வாழக்கூடிய அளவிற்கு என்னிடம் போதுமான பணம் உள்ளது.
வீரர்கள் தனிப்பட்ட முறையில் அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ, அதை வழங்க முடியும். வீரர்கள் எந்த தரவரிசையில் இருந்தாலும் பணம் கொடுங்கள் என்று கூறுவது கடினம். மாறுபட்ட கருத்துக்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டென்னிஸ் போட்டியை விரும்பும் எல்லோரையும் டென்னிஸ் போட்டியை காப்பாற்றுவதற்காக நிதி அளிக்க வேண்டும் என அழைக்கிறேன்.
வீர, வீராங்கனைகளின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒற்றுமையை இந்த நேரத்தில் காட்ட வேண்டும். அதேபோல் கீழ்மட்டத்திலுள்ள வீரர்களை மறக்கவில்லை என்பதையும் காட்ட வேண்டும்’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM