தம்பகல - கலவோய வனப்பகுதியில் வேட்டைக்காரர்கள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார்.
கலா ஓயா தேசிய வனவிலங்கு சரணாலய பகுதியில் சுற்றிவளைப்புக்குச்சென்ற வனவிலங்கு திணைக்களத்தின் இங்கினியாகலை அதிகாரியே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சரணாலயத்தில் மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்தோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலவோய தேசிய வனப்பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இங்னியாகல வனஜீவராசிகள் பாதுகாப்பு காரியலயத்தின் அதிகாரிகள் சிலர் சோதனை நடடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது குறித்த வனப்பகுதியில் வேட்டையிடும் நோக்கத்துடன் வந்துள்ள நபர்களால் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது துப்பாக்கி சூட்டு நடத்தப்பட்டுள்ளதுடன் , சம்பவத்தில் அதிகாரியொருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து சந்தேக நபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
இங்கினியாகல வனஜீவராசிகள் பாதுகாப்பு நிலையத்தில் கடமைபுரிந்து வந்த 25 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து குழல் 12 ரக துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கியை பயன்படுத்தியே அவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM