கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி செய்வாதற்காக வித்தியாசமான முறையை கையாண்ட, இந்திய மகளிர் ஹொக்கி அணியினர் முதல் நான்கு நாட்களில் இந்திய மதிப்பில் 7 இலட்சம் ரூபா நிதி திரட்டியது.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் இருப்பதால் ஏழை கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி திரட்டுவதற்காக இந்திய மகளிர் ஹொக்கி அணி யினர் ‘ஒன்லைன்’ மூலம் உடல் தகுதி சவால் போட்டியை நடத்தி வருகிறது.
இதன்படி வீராங்கனைகள் அளிக்கும் உடல் தகுதி சவாலை ஏற்று செயற்படும் இரசிகர்கள் நன்கொடை வழங்க வேண்டும். 18 நாட்கள் நடத்தப்படும் இந்த சவால் நிகழ்ச்சியில் முதல் 4 நாட்களில் மாத்திரம் 7 இலட்சம் ரூபா திரட்டப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய மகளிர் ஹொக்கி அணியின் வீராங்கனை சுஷிலா சானு தெரிவித்துள்ளதாவது,
“கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் உடற் தகுதி சவால் மூலம் நிதி திரட்டி வருவதற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போது ஹொக்கி பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டிருப்பதால், முந்தைய காலங்களில் நாங்கள் விளையாடிய போட்டி மற்றும் எதிரணியினர் விளையாடிய போட்டிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்து ஆட்டத்தை ஆய்வு செய்து வருகிறோம். மேலும், எமது மக்களுக்கு எம்மாலான உதவிகளை தொடர்ந்து செய்வோம்.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM