"கொவிட்- 19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக அனைத்து நாடுகளுமே நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் இலங்கைக்கான சகல விமான சேவைகளும் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் கல்வி கற்கும், தொழில்புரியும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் அவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த காலங்களில் பாகிஸ்தானில் நெருக்கடிகளை சந்தித்திருந்த 113 இலங்கை மாணவர்களையும் அழைத்து வருவதற்காக வெளிவிவகாரத்துறை அமைச்சின் உதவியுடன் நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது.
இதில் உயர்கல்வியை தொடர பாகிஸ்தான் சென்றவர்கள் மற்றும் பாதுகாப்பு கற்கைகளை முன்னெடுக்க சென்றவர்கள் என பலர் உள்ளடங்குவர்.
அதற்கமைய விசேட விமானமொன்றை அனுப்பி குறித்த மாணவர்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1205 என்ற விமானம் இன்று காலை பாகிஸ்தான் கராச்சி நகர் நோக்கி சென்ற நிலையில் குறித்த விமானம் இலங்கை மாணவர்கள் 113 பேருடன் இன்று மாலை 6.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
குறித்த மாணவர்கள் அனைவரையும் கொரோனா தொற்றுநோய் உள்ளதா என்ற பரிசோதனைகளை முன்னெடுக்கும் விதத்தில் தனிமைப்படுதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM