இந்தியா, பாகிஸ்தான், நேபாளத்திலுள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர நடவடிக்கை

Published By: J.G.Stephan

21 Apr, 2020 | 06:00 PM
image

(நா.தனுஜா)

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் கல்வி பயிலும் 433 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலையடுத்து, சர்வதேச ரீதியான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக வெளிநாடுகளில் பணியாற்றிய அரச அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும், வெளிநாடுகளில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களும் நாடு திரும்ப முடியாத நிலையேற்பட்டது.

இந்நிலையில்  433 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் விதமாக இந்தியாவின் அமர்சட், கோயம்பத்தூர், பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் நேபாளத்தின் காத்மண்டு ஆகிய நகரங்களிலிருந்து இலங்கை விமானங்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் லாகூரிலிருந்து 93 பேரும், கராச்சியிலிருந்து 20 பேரும் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அதேபோன்று நாளை மறுதினம் 101 இலங்கையர்கள் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்படுவர். மேலும்  24 ஆம் திகதி கோயம்பத்தூரிலிருந்து 117 பேரும், காத்மண்டுவிலிருந்து 93 பேரும் இலங்கை விமானசேவை ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள்.

வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படு வரும் நடவடிக்கைகளின் பிரகாரம், இலங்கை திரும்பும் மாணவர்களை உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கான வசதிகள்  பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06