(நா.தனுஜா)
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் கல்வி பயிலும் 433 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து விமானநிலையம் மற்றும் விமானசேவைகள் நிறுவனத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலையடுத்து, சர்வதேச ரீதியான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக வெளிநாடுகளில் பணியாற்றிய அரச அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும், வெளிநாடுகளில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களும் நாடு திரும்ப முடியாத நிலையேற்பட்டது.
இந்நிலையில் 433 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரும் விதமாக இந்தியாவின் அமர்சட், கோயம்பத்தூர், பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் நேபாளத்தின் காத்மண்டு ஆகிய நகரங்களிலிருந்து இலங்கை விமானங்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் லாகூரிலிருந்து 93 பேரும், கராச்சியிலிருந்து 20 பேரும் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். அதேபோன்று நாளை மறுதினம் 101 இலங்கையர்கள் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்படுவர். மேலும் 24 ஆம் திகதி கோயம்பத்தூரிலிருந்து 117 பேரும், காத்மண்டுவிலிருந்து 93 பேரும் இலங்கை விமானசேவை ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள்.
வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படு வரும் நடவடிக்கைகளின் பிரகாரம், இலங்கை திரும்பும் மாணவர்களை உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கான வசதிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM