உலகைகையே நடுநடுங்கச் செய்துள்ள கொரோனாவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியையடுத்து பிரான்சிலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அங்கு ஒரு இலட்சத்தது 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அத்தோடு, தினமும் கொரோனாவால் பிரான்ஸில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்திற்குள் மாத்திரம் 2,489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 155,383 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே கொரோனாவால் அதிக மரணத்தை சந்தித்த நான்காவது நாடாகவும் பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
அதாவது அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளை தொடர்ந்து பிரான்சிலும் உயிரிழப்புக்கள் 20 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 547 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் இதுவரை 37, 409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், பிரான்சில் தற்போது 97,709 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 5,683 பேரின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் தீவர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
பிரான்சில் பெப்ரவரி 15 ஆம் திகதி 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை மார்ச் முதலாம் திகதி 100 ஆக உயர்வடைந்தது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,480,503 ஆகவும், மரணமானோரின் எண்ணிக்கை 170,397, தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,664,372ஆகவும், குணமடைந்தோர் 665,734ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM