பிரான்சில் முடக்கல் நிலையின் நிலையின் போது காவல்துறையினருக்கும் பொதுமக்களிற்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
பிரான்சின் வடபகுதியில் உள்ள புறநகர்பகுதிகளிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
அப்பகுதியை சேர்ந்த மக்கள் குப்பைகளையும் வாகனங்களையும் தீயிட்டுக்கொழுத்தியுள்ள அதேவேளை காவல்துறையினர் கண்ணீர்புகைபிரயோகத்தை மேற்கொண்டதுடன் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினரின் சோதனைசாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயமடைந்த சம்பவத்தை தொடர்ந்தே ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
குறிப்பிட்ட நபர் காவல்துறையின் வாகனத்தின் கதவில் மோதி காயமடைந்துள்ளார் .
அப்பகுதி மக்கள் காவல்துறையினர் வேண்டுமென்றே வாகனத்தின் கதவை திறந்து வைத்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் கூடிய மக்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் இரண்டு மணிநேரம் பொதுமக்களிற்கும் காவல்துறையினருக்கும் இடையில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை தீயிட்டு கொழுத்தியுள்ளதுடன்,பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
இதேவேளை குடியேற்றவாசிகள் அதிகமாக வாழும் பகுதிகளில் இருந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM