(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தினமாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
இன்றைய தினத்தில் இரவு 8.00 மணி வரையிலான 15 மணி நேரத்தில் 33 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 7 தொற்றாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், நேற்றும் இருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறினர்.
அதன்படி இதுவரை 98 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளனர். இந் நிலையில், 199 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள் மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன் கொரோனா சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 122 ஆகும். அவர்கள் நாடளாவிய ரீதியில் 23 வைத்தியசாலைகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் இரவு 8 மணி வரையிலான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட 33 பேரும் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் தொடர்ந்தும் அதிக தொற்றாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
அந்த தகவல்கள் பிரகாரம் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டோர் எண்ணிக்கை 187 ஆகும். இதில் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆகும்.
அதற்கு அடுத்தபடியாக களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளத்தில் 35 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் இதுவரை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 ஆகும். கண்டியில் 7 பேரும், இரத்தினபுரியில் 5 பேரும், கேகாலையில் மூவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைவிட குருணாகல், மாத்தறை மற்றும் கல்முனை ஆகிய சுகாதார மாவட்டங்களில் தலா இருவர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா மாவட்டங்களில் தலா ஒவ்வொரு கொரோனா தொற்றாளர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இன்று இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்பட்ட 304 தொற்றாளர்களில், 3 வெளிநாட்டவர்களும், வெளிநாட்டிலிருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்ட 38 பேரும் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM