ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்துவது ஆபத்து : முத்தையா முரளிதரன்

Published By: Digital Desk 3

20 Apr, 2020 | 08:08 PM
image

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஐ.பி.எல்.தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்தில் முடியும் என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 29 ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்கு பி.சி.சி.ஐ. திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், கொரோனா வைரஸ் காரணமாக இப்போட்டித் தொடர் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு  ஆரம்பத்தில் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தது. எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இப் போட்டியை நடத்த தயார் என்றும், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட்  சபைக்கு விரைவில் கடிதம் எழுதுவோம் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன. எனினும், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்துவது ஆபத்தானது என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிர் அவர் தெரிவித்துள்ளதாவது,

"ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்துவது பேச்சு அளவிலேயே உள்ளது. எனக்கு தெரிந்த வகையில், இது ஒரு நிரந்தர தீர்வாகாது. முதலில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.

இலங்கையில் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இலங்கைக்கு வருவார்கள். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இது மிகப்பெரிய ஆபத்தை வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும்"  என முரளிதரன் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35