ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஐ.பி.எல்.தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்தில் முடியும் என இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் 29 ஆம் திகதியன்று ஆரம்பிப்பதற்கு பி.சி.சி.ஐ. திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், கொரோனா வைரஸ் காரணமாக இப்போட்டித் தொடர் ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு ஆரம்பத்தில் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தது. எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இப் போட்டியை நடத்த தயார் என்றும், இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபைக்கு விரைவில் கடிதம் எழுதுவோம் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன. எனினும், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் சபை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்துவது ஆபத்தானது என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிர் அவர் தெரிவித்துள்ளதாவது,
"ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்துவது பேச்சு அளவிலேயே உள்ளது. எனக்கு தெரிந்த வகையில், இது ஒரு நிரந்தர தீர்வாகாது. முதலில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முற்றிலும் நீக்கப்பட வேண்டும். அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல.
இலங்கையில் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இலங்கைக்கு வருவார்கள். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இது மிகப்பெரிய ஆபத்தை வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும்" என முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM