(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் பொதுத்தேர்தலை அரசாங்கம் ஒரு போதும் நடத்தாது. மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தாமல் அரசாங்கம் அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டு பொதுத்தேர்தலை நடத்த முயற்சிப்பதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் ஒருபோதும் பொதுத்தேர்தலை நடத்தாது என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.
ஜனாதிபதி நிர்ணயித்த திகதியில் பொதுத்தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ளது. தேர்தலை பிற்போடும் போது தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தும் திகதியை அறிவித்திருக்க வேண்டும். ஒரு சில விடயங்கள் இன்று பலதரப்பட்ட சட்ட சிக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அனைத்தும் சட்ட ரீதியாக தீர்வு காணப்படும்.
மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் செயற்படுகின்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாமல் பொதுத்தேர்தல் ஒருபோதும் இடம் பெறாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM