ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் ஊழியர்கள் கடமைக்கு திரும்பியிருந்ததுடன் மக்களும் தமது தேவைகைள நிறைவு செய்வதற்காக அரச திணைக்களங்களை நோக்கி வருகை தந்திருந்தனர்.
இதன்போது வவுனியா பிரதேச செயலகத்தின் வாயிலில் தேவையின் பொருட்டு வரும் மக்களை ஒழுங்கமைப்பு செய்வதற்காக நுழைவாயிலில் இலக்கம் வழங்கப்பட்டு மக்கள் சீராக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கைகளை கழுவி செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஏனைய அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்கள் கணிசமாக வருகை தந்திருந்ததுடன் ஏனைய மாவட்டங்களுக்கு சென்றிருந்த உத்தியோகத்தர்கள் கணிசமாக சமூகமளித்திருக்கவில்லை.
வவுனியா மொத்த வியாபார மரக்கறி சந்தையில் மரக்கறிகள் அதிகளவில் குவிந்து காணப்பட்டதுடன் அவை வெளிமாவட்டங்களுக்கு அனுப்புவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பேரூந்து சேவையின் வவுனியா சாலையினால் உள்ளுர் சேவைகள் இன்று மேற்கொள்ளப்பட்டதுடன் மன்னார் மற்றும் முல்லைத்தீவுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரம் இடம்பெற்றிருந்தது.
அத்துடன் வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக மரக்கறி உட்பட ஏனைய வியாபாரங்களும் இடம்பெற்று வந்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM